பிசியோதெரபி சிகிச்சையால் முதலமைச்சர் ஜெயலலிதா இயல்பு நிலைக்கு திரும்பி விட்டார் என அப்போலோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் சி.ரெட்டி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, முதலமைச்சர் விரைவில் பூரண நலம்பெற பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். கட்சியினரும் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வேண்டிக்கொண்டனர்.
மருத்துவர்களின் தீவிர சிகிச்சையின் காரணமாக முதலமைச்சர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 58 நாட்கள் தொடர் சிகிச்சைக்குப் பிறகு முதலமைச்சர் ஜெயலலிதா, ஐ.சி.யு.வில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அப்போலோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி, பிசியோதெரபி சிகிச்சையால் முதலமைச்சர் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டார் என தெரிவித்தார். 90 சதவிகித நேரத்தில் முதலமைச்சர் சுயமாக சுவாசிப்பதாகவும், எப்போது வீடு திரும்புவது என்பதையும் அவரே முடிவு செய்வார் என்றும் கூறியுள்ளார்.
முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, முதலமைச்சர் விரைவில் பூரண நலம்பெற பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். கட்சியினரும் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வேண்டிக்கொண்டனர்.
மருத்துவர்களின் தீவிர சிகிச்சையின் காரணமாக முதலமைச்சர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 58 நாட்கள் தொடர் சிகிச்சைக்குப் பிறகு முதலமைச்சர் ஜெயலலிதா, ஐ.சி.யு.வில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அப்போலோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி, பிசியோதெரபி சிகிச்சையால் முதலமைச்சர் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டார் என தெரிவித்தார். 90 சதவிகித நேரத்தில் முதலமைச்சர் சுயமாக சுவாசிப்பதாகவும், எப்போது வீடு திரும்புவது என்பதையும் அவரே முடிவு செய்வார் என்றும் கூறியுள்ளார்.