கேழ்வரகின் விலை விவசாயிகளை மகிழ்விக்கும் என வேளாண் பல்கலைக்கழகம் தகவல்

கேழ்வரகு சிறுதானிய பயிர்களில் மிக முக்கியமான உணவுப் பொருளாகவும், மிகுந்த ஊட்டச்சத்து வாய்ந்ததாகவும், சேமித்து வைக்க ஏதுவானதாகவும் உள்ளது. இந்திய தேசிய வேளாண்மை அமைச்சகத்தின் நான்காம் முன் மதிப்பீட்டின் படி, 2015- 16 ஆம் ஆண்டில் கேழ்வரகு 1.20 மில்லியன் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 1.79 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

கேழ்வரகு உற்பத்தியில் கர்நாடகா, தமிழ்நாடு, ஒடிசா, ஆந்திர பிரதேசம், உத்திரகாண்ட், மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம் மற்றும் இமாச்சல் பிரதேசத்தின் மலைப்பாங்கான பகுதிகள் பெரும் பங்கு வகிக்கிறது.

தமிழ்நாட்டில் பொருளாதாரம் மற்றும் புள்ளியல் இயக்குனரகம் மதிப்பீட்டின்படி 2014- 15 ஆம் ஆண்டு கேழ்வரகு 0.11 மில்லியன் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 0.25 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து மாநிலத்தின் மொத்த கேழ்வரகு உற்பத்தியில் 87 சதவிகிதம் உற்பத்தி செய்யப்படுகிறது.

டிசம்பர் மாத இறுதியில் கேழ்வரகின் சந்தை வரத்து ஆரம்பமாகிறது. இதனை தொடர்ந்து, வருடம் முழுவதும் சேமித்து வைத்து பயன்படுத்தப்படுகிறது. சாதகமற்ற பருவ மழையின் காரணமாக கேழ்வரகின் உற்பத்தி தமிழகத்தில் குறைந்துள்ளது. எனவே, கேழ்வரகிற்கு தேவை அதிகமாக இருப்பதால் வரும் மாதங்களில் நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சூழலில் விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக கடந்த 10 ஆண்டுகளாக திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலவிய கேழ்வரகு விலையை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில், ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் கீழ் இயங்கி வரும் விலை முன்னறிவிப்பு திட்டம், ஆய்வு செய்து சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வு முடிவின் அடிப்படையில் தரமான கேழ்வரகின் பண்ணை விலையானது கிலோவிற்கு ரூ.20 முதல் 22 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனைகளின் படி விதைப்பு முடிவுகளை எடுத்தால் அதிக பயன்பெறலாம்.

இதுகுறித்தான மேலும் விவரங்களுக்கு உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை - 641 003 என்ற முகரிக்கோ, அல்லது, 0422- 2431405 என்ற தொலைபேசி எண்ணிற்கோ தொடர்பு கொண்டு தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...