கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ காலமானார்



கியூபாவின் முன்னாள் அதிபரும், கம்யூனிஸ்ட்டின் முதுபெரும் புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ தனது 90-வது வயதில் சனிக்கிழமையன்று (இன்று) உயிரிழந்தார்.

1962 ஆகஸ்ட் 13ம் தேதியன்று கியூபாவில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர் பிடல் காஸ்ட்ரோ. பல்வேறு செல்வங்களை பெற்ற குடும்பத்தில் பிறந்திருந்தாலும், கியூபா மக்களின் அடிமை நிலையைக் கண்டு தனது வசதியான வாழ்க்கையை புறந்தள்ளி மக்களுக்காக அமெரிக்காவின் ஏகாதிபத்திய நாட்டை எதிர்த்து போராட துவங்கினார். 

கியூபாவில் நடைபெற்று வந்த அமெரிக்காவின் கைக்கோளான சர்வாதிகாரி புல்ஜென்சியோ பாட்டிட்ஸ்டாவின் ஆட்சிக்கு எதிராக போராடி அதிகாரத்தை கைப்பற்றினார் பிடல் காஸ்ட்ரோ. இதையடுத்து, தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ, 1959-ம் ஆண்டு முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராக பதவி வகித்தார். கடந்த 1976-ஆம் ஆண்டு அந்நாட்டு அதிபராக பொறுப்பேற்ற காஸ்ட்ரோ 2008 வரை அப்பதவியில் நாடுபோற்றும் சிறப்பான செயல்களில் ஈடுபட்டார். 

கியூபாவின் விடுதலை காலம் தொட்டு, கடந்த 50 வருடத்திற்கும் மேலாக அதிபராக பதவி வகித்த பிடல் காஸ்ட்ரோ கடந்த 2008-ம் ஆண்டு ஏற்பட்ட உடல் நலக் குறைவின் காரணமாக அதிபர் பதவியை தனது சகோதரர் ராவல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார்.

இருப்பினும், சோர்வடையாமல், தொடர்ந்து கியூபாவின் வளர்ச்சிக்காக திட்டமிடல் போன்ற செயல்களில் ஈடுபட்டு, மருத்துவம், பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் கியூபாவை தனிச் சிறப்புமிக்க நாடாக மாற்றியதில் பெரும்பங்கு வகித்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் பிடல் தனது 90-வது பிறந்த நாளை உற்சாகத்துடன் கொண்டாடினார். 

இந்நிலையில், சில தினங்களாக உடல் நலக் குறைவின் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த பிடல் காஸ்ட்ரோ இன்று (சனிக்கிழமை) உயிரிழந்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...