பிரபாகரன் சுவரொட்டியை அச்சடித்தால் வழக்கு போடுவோம் என்று போலீசார் மிரட்டியதாக புகார்

மறைந்த தமிழீழ விடுதலை போராட்டத்த்தின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் விழாவுக்கான சுவரொட்டியை அச்சடித்தாலும், ஒட்டினாலும் வழக்கு போடுவோம் என்று போலீசார் மிரட்டுவதாக தமிழர் விடியல் கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தனர். 

இது குறித்து அந்த மனுவில் கூறப்பட்டதாவது :- 

பிரபாகரனின் உருவப்படத்தை அச்சடிக்க கோவையில் தான் அதிக கெடுபிடி நிலவுகிறது. விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்படிருந்தாலும் அதன் தலைவர்கள் பற்றி பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் போலீசார் அச்ச்கங்களில் புகுந்து மிரட்டுவது அடக்குமுறையை காட்டுகிறது. எனவே, மற்ற மாவட்டங்களை போல எங்களுக்கும் பிரபாகரனின் உருவம் பதித்த சுவரொட்டியை அச்சடிக்கவும், சுவரில் ஒட்டவும்  அனுமதி அளிக்க வேண்டும். 

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...