கோவை மாநகரில் ஏற்படும் விபத்துகளை குறைக்கும் வகையில் போக்குவரத்துத் துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, சுங்கம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடை, வாகன ஓட்டிகளுக்கு சரியாக தெரியாத வகையில் இருப்பதாக காவல் துணை ஆணையருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து அதனை சீரமைத்து வண்ணம் பூசவும், பிரதிபலிப்பான் பொறுத்தவும் காவல் துணை ஆணையர் சரவணன், போக்குவரத்து காவல் ஆய்வாளருக்கு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து உடனடியாக, அந்த வேகத் தடைக்கு வண்ணம் பூசப்பட்டு, பிரதிபலிப்பான் பொறுத்தப்பட்டது.
இதனிடையே, சாலையில் ஏற்பட்டுள்ள சீர்கேடுகளை காவல் துறைக்கு பொதுமக்கள் தெரியப்படுத்தும் வகையில் காவல் துறை கட்டுப்பாட்டு அறை எண் 8190000100 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு தங்களது சாலைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து ஆலோசனைகளை தெரியப்படுத்தினால் உடனடியாக சாலை சீரமைக்க நடவடிக்கை மெற்கொள்ளப்படும் என கோவை மாநகர காவல் துணை ஆணையர் ச.சரவணன் தெரிவித்துள்ளார்.