கோவை மாநகரில் விபத்துகளை குறைக்கும் வகையில் வாட்ஸ்அப் எண் அறிவித்துள்ள போக்குவரத்துத் துறை


கோவை மாநகரில் ஏற்படும் விபத்துகளை குறைக்கும் வகையில் போக்குவரத்துத் துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக, சுங்கம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடை, வாகன ஓட்டிகளுக்கு சரியாக தெரியாத வகையில் இருப்பதாக காவல் துணை ஆணையருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து அதனை சீரமைத்து வண்ணம் பூசவும், பிரதிபலிப்பான் பொறுத்தவும் காவல் துணை ஆணையர் சரவணன், போக்குவரத்து காவல் ஆய்வாளருக்கு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து உடனடியாக, அந்த வேகத் தடைக்கு வண்ணம் பூசப்பட்டு, பிரதிபலிப்பான் பொறுத்தப்பட்டது.

இதனிடையே, சாலையில் ஏற்பட்டுள்ள சீர்கேடுகளை காவல் துறைக்கு பொதுமக்கள் தெரியப்படுத்தும் வகையில் காவல் துறை கட்டுப்பாட்டு அறை எண் 8190000100 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு தங்களது சாலைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து ஆலோசனைகளை தெரியப்படுத்தினால் உடனடியாக சாலை சீரமைக்க நடவடிக்கை மெற்கொள்ளப்படும் என கோவை மாநகர காவல் துணை ஆணையர் ச.சரவணன் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...