கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் நிஜாகிர் (14). தனியார் பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இவரது பெற்றோர் இவருக்கு 3 விலையுயர்ந்த செல்போன்கள் வாங்கி கொடுத்தனர். ஆனால் அதை ஒவ்வொன்றாக நிஜாகிர் தொலைத்ததாக தெரிகிறது. இதனால் சிறிது நாட்களாகவே மனமுடைந்து காணப்பட்ட நிஜாகிர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
இவரது பெற்றோர் வீட்டிற்கு வந்த போது, மகன் இறந்து கிடந்ததை பார்த்து கதறி அழுதனர். இது குறித்து தகவலறிந்த ஆர்.எஸ். புரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இவரது பெற்றோர் வீட்டிற்கு வந்த போது, மகன் இறந்து கிடந்ததை பார்த்து கதறி அழுதனர். இது குறித்து தகவலறிந்த ஆர்.எஸ். புரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.