காலணி அருந்ததால் பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்த்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி

ஈஷா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி மும்பையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது, கோவை விமான நிலையத்தில் அவரது காலணி அருந்ததால் விமான நிலையத்தில் பேட்டிக்காக கூடியிருந்த பத்திரிகையாளர் சந்திப்பை அவர் தவிர்த்துச் சென்றார்.

கோவை மாவட்டத்தில் செயல்படும் ஈஷாவில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பங்கேற்பதற்காக மத்திய பாஜக ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி சனிக்கிழமையன்று (இன்று) விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது  கோவை விமான நிலையத்தில் அவர் அணிந்திருந்த காலணி அருந்ததைத் தொடர்ந்து, ஒரு கால் செருப்புடனும், மற்றொரு கால் செருப்பில்லாமலும் விமான நிலையத்தின் உள்ளே இருந்து வெளியே நடந்து வந்தார்.

அப்போது, அங்கு பத்திரிகையாளர்கள் கூடியிருந்தும் அவர்களுடனான சந்திப்பை தவிர்த்து கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரில் புறப்பட்டார். 

இதைத்தொடர்ந்து, ஈஷா யோகா மையம் செல்லும் வழியில் பேரூர் பகுதியில் காரை நிறுத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, அங்கிருந்த செருப்பு கடைக்கு சென்று தனது செருப்பை தைத்தார். பின், செருப்பு தைத்ததற்கான கூலியாக 100 ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் கடைக்காரரிடம் 100 ரூபாய்க்கு சில்லறை இல்லாததால் மீண்டும் செருப்பை வாங்கி கூடுதலாக 2 தையல்கள் இட்டு கொடுத்துள்ளார்.

பின்னர், அங்கிருந்து புறப்பட்ட ஸ்மிருதி இராணி, ஈஷா நிகழ்ச்சியில் பங்கேற்றார். 

இதனிடையே, பலத்த பாதுகாப்பு வாகனங்களுடன் சென்ற மத்திய அமைச்சர் திடீரென சாலையோரம் காரை நிறுத்தி அங்கிருந்த கடைக்குச் சென்று சாதாரண இருக்கையில் அமர்ந்ததால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...