கோவையில் முதல் முறையாக ஐஸ்வர்யா கருத்தரிப்பு மையம் கோவை கிளையில் டெஸ்ட் டியூப் பேபி சிகிச்சையில் புதிய கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் குழந்தையில்லா தம்பதியர்களுக்கு டெஸ்ட் டியூப் பேபி சிகிச்சை மிகவும் உதவி வருகிறது. இந்த டெஸ்ட் டியூப் பேபி சிகிச்சையில் வெற்றி சதவிகிதத்தை அதிகப்படுத்த கோவை ஐஸ்வர்யா கருத்தரிப்பு மையம் "Embryoscope - Time lapse" என்ற கருவியை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த கருவியானது கருக்களின் வளர்ச்சியை தொடர்ந்து கண்காணித்து அதில் நல்லக்கருவை தேர்ந்தெடுத்து பெண்ணின் கர்பப்பையில் உட்செலுத்தி அதிக வெற்றியை காண உதவுகிறது.
வயதான தம்பதியர்களுக்கும், ஐவிஎஃப் டெஸ்ட் டியூப் சிகிச்சையில் தோல்வி பெற்ற தம்பதியர்களுக்கும் இந்த புதிய சாதனம் பயனுள்ளதாக இருக்கும்.
சனிக்கிழமையன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியினை, அதிமுக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.
குழந்தையில்லா தம்பதியர்களுக்கு வெற்றிவாய்ப்பை அதிகரிக்கும் இந்த கருவியை அறிமுகப்படுத்துவதில் ஐஸ்வர்யா மகளிர் மருத்துவமனையின் சேவையில் ஒரு மைல்கள் ஆகும்.