சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான சட்ட வல்லுநர்கள் குழு உலக நாடுகளில் உள்ள சட்டங்களை எல்லாம் அலசி ஆராய்ந்து ஒரு சட்ட முன்வடிவை அரசு பரிந்துரை செய்து இந்திய அரசியலமைப்பு சபையால் அந்த முன்வடிவு அங்கீகரிக்கப்பட்ட நாள் நவம்பர் 26-ஆம் தேதி ஆகும்.

அந்நாளை சட்ட நாளாக கொண்டாடப்படும் வகையில் இன்று வால்பாறை நீதிமன்ற வளாகத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு வால்பாறை வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிபதி ஆறுமுகம் தலைமை வகித்தார். வால்பாறை வழக்கறிஞர் சங்க செயலாளர் பெருமாள் வரவேற்புரை ஆற்றினார். வால்பாறை வனச்சரக அலுவலர் சக்திவேல், மாணாம்பள்ளி வனச்சரக அலுவலர் சேகர், நகராட்சி பொறியளர் ராஜகோபால், மோட்டார் வாகன ஆய்வாளர் முருகானந்தம், வால்பாறை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர். ஆனந்தன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இந்நிகழ்ச்சியில், வழக்கறிஞர்கள் பால்பாண்டி, சுமதி, வினோத்குமார், அன்பு நாகராஜன் உள்ளிட்ட பல நீதிமன்ற அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, இந்நிகழ்ச்சியில் நீதிபதி ஆறுமுகம் பேசுகையில், பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளுக்கு இலவசமாக நீதிமன்றத்தை நாடி சட்ட ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் குறித்து பேசினார்.
இதனைத்தொடர்ந்து, முகாமில் பெரும்பாலான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்கள் அளித்தனர்.

அந்நாளை சட்ட நாளாக கொண்டாடப்படும் வகையில் இன்று வால்பாறை நீதிமன்ற வளாகத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு வால்பாறை வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிபதி ஆறுமுகம் தலைமை வகித்தார். வால்பாறை வழக்கறிஞர் சங்க செயலாளர் பெருமாள் வரவேற்புரை ஆற்றினார். வால்பாறை வனச்சரக அலுவலர் சக்திவேல், மாணாம்பள்ளி வனச்சரக அலுவலர் சேகர், நகராட்சி பொறியளர் ராஜகோபால், மோட்டார் வாகன ஆய்வாளர் முருகானந்தம், வால்பாறை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர். ஆனந்தன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இந்நிகழ்ச்சியில், வழக்கறிஞர்கள் பால்பாண்டி, சுமதி, வினோத்குமார், அன்பு நாகராஜன் உள்ளிட்ட பல நீதிமன்ற அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, இந்நிகழ்ச்சியில் நீதிபதி ஆறுமுகம் பேசுகையில், பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளுக்கு இலவசமாக நீதிமன்றத்தை நாடி சட்ட ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் குறித்து பேசினார்.
இதனைத்தொடர்ந்து, முகாமில் பெரும்பாலான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்கள் அளித்தனர்.