வால்பாறை நீதிமன்ற வளாகத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான சட்ட வல்லுநர்கள் குழு உலக நாடுகளில் உள்ள சட்டங்களை எல்லாம் அலசி ஆராய்ந்து ஒரு சட்ட முன்வடிவை அரசு பரிந்துரை செய்து இந்திய அரசியலமைப்பு சபையால் அந்த முன்வடிவு அங்கீகரிக்கப்பட்ட நாள் நவம்பர் 26-ஆம் தேதி ஆகும்.



அந்நாளை சட்ட நாளாக கொண்டாடப்படும் வகையில் இன்று வால்பாறை நீதிமன்ற வளாகத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமிற்கு வால்பாறை வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிபதி ஆறுமுகம் தலைமை வகித்தார். வால்பாறை வழக்கறிஞர் சங்க செயலாளர் பெருமாள் வரவேற்புரை ஆற்றினார். வால்பாறை வனச்சரக அலுவலர் சக்திவேல், மாணாம்பள்ளி வனச்சரக அலுவலர் சேகர், நகராட்சி பொறியளர் ராஜகோபால், மோட்டார் வாகன ஆய்வாளர் முருகானந்தம், வால்பாறை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர். ஆனந்தன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.



இந்நிகழ்ச்சியில், வழக்கறிஞர்கள் பால்பாண்டி, சுமதி, வினோத்குமார், அன்பு நாகராஜன் உள்ளிட்ட பல நீதிமன்ற அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, இந்நிகழ்ச்சியில் நீதிபதி ஆறுமுகம் பேசுகையில், பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளுக்கு இலவசமாக நீதிமன்றத்தை நாடி சட்ட ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் குறித்து பேசினார்.

இதனைத்தொடர்ந்து, முகாமில் பெரும்பாலான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்கள் அளித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...