கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்லூரி வளாகத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள வீடியோ கேம் விளையாட்டுப் பிரியர்களை கவரும் வகையிலும், அவர்களது மத்தியில் விளையாட்டினை ஊக்கப்படுத்தும் வகையிலும் கேம்மிங் பிரீமியர் லீக் ''மகாயுத்'' என்ற விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டுப் போட்டிக்கு டெக் ப்ரேக்த்ரோ முதன்மை நிரைவேற்று அதிகாரி விஷால் வெங்கடேசன் ஏற்பாடு செய்திருந்தார்.

இதுகுறித்து, விஷால் வெங்கடேசன் நமது நிருபரிடம் கூறியதாவது:-
வார விடுமுறையினை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் இந்த விளையாட்டுப் போட்டி துவங்கப்பட்டுள்ளது. கோவையில் பல்வேறு விளையாட்டு ஆர்வலர்கள் உள்ளனர். அவர்களை ஊக்கப்படுத்துவதே எங்களது நோக்கம்.
''மகாயுத்'' விளையாட்டில் மொத்தம் 40 குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 4 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கிடையே போர் போன்ற போட்டிகள் பெரிய திரையில் நடைபெறும். கவுண்டர் ஸ்ட்ரைக் குலோபல் (Counter Strike Global Offence) என்ற இந்த விளையாட்டு பெரும்பாலும் ஐடி நிறுவனத்தினரையே ஈர்த்துள்ளது.

இந்த விளையாட்டில் நீக்கமும் உள்ளது. போட்டியின் முடிவில் குறைந்த இலக்கை அடைந்தவர்கள் நீக்கப்படுவர். வெற்றி பெற்றவர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி அடைவர். இதன் இறுதிச் சுற்று நாளை (செவ்வாய்) நடைபெற உள்ளது. இதில் வெற்றியடைவோருக்கு 75 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, மகாயுத் விளையாட்டு அமைக்கப்பட்டுள்ள வளாகத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிறுவனங்களின் ஸ்டாலும் அமைக்கப்பட்டுள்ளது. இது, அந்த நிறுவனங்களுக்கு பயனுள்ள விளம்பரமாகவும் உள்ளது. அதில், 3டி-யில் வரைதல், ஆட்டோமேஷன் சென்சார் செயலி உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விளையாட்டு நிகழ்ச்சி சிறப்பான முறையில் உள்ளது. பல்வேறு மன சோர்வுகளில் இருந்து மக்கள் மீண்டுவர இது பயனுள்ளதாக அமைந்தது என விஷால் வெங்கடேசன் தெரிவித்தார்.

இதுகுறித்து, விஷால் வெங்கடேசன் நமது நிருபரிடம் கூறியதாவது:-
வார விடுமுறையினை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் இந்த விளையாட்டுப் போட்டி துவங்கப்பட்டுள்ளது. கோவையில் பல்வேறு விளையாட்டு ஆர்வலர்கள் உள்ளனர். அவர்களை ஊக்கப்படுத்துவதே எங்களது நோக்கம்.
''மகாயுத்'' விளையாட்டில் மொத்தம் 40 குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 4 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கிடையே போர் போன்ற போட்டிகள் பெரிய திரையில் நடைபெறும். கவுண்டர் ஸ்ட்ரைக் குலோபல் (Counter Strike Global Offence) என்ற இந்த விளையாட்டு பெரும்பாலும் ஐடி நிறுவனத்தினரையே ஈர்த்துள்ளது.

இந்த விளையாட்டில் நீக்கமும் உள்ளது. போட்டியின் முடிவில் குறைந்த இலக்கை அடைந்தவர்கள் நீக்கப்படுவர். வெற்றி பெற்றவர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி அடைவர். இதன் இறுதிச் சுற்று நாளை (செவ்வாய்) நடைபெற உள்ளது. இதில் வெற்றியடைவோருக்கு 75 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, மகாயுத் விளையாட்டு அமைக்கப்பட்டுள்ள வளாகத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிறுவனங்களின் ஸ்டாலும் அமைக்கப்பட்டுள்ளது. இது, அந்த நிறுவனங்களுக்கு பயனுள்ள விளம்பரமாகவும் உள்ளது. அதில், 3டி-யில் வரைதல், ஆட்டோமேஷன் சென்சார் செயலி உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விளையாட்டு நிகழ்ச்சி சிறப்பான முறையில் உள்ளது. பல்வேறு மன சோர்வுகளில் இருந்து மக்கள் மீண்டுவர இது பயனுள்ளதாக அமைந்தது என விஷால் வெங்கடேசன் தெரிவித்தார்.