கோவை: ஆர்.எஸ் புரம் பாரதீய வித்யாபவன் பள்ளி கலையரங்கில் இன்று மாலை 6 மணியளவில் கர்நாடக இசையில் மகசேசே விருது பெற்ற இசைக்கலைஞர் வித்வான் டி.எம் கிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில், இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழக தலைவர்(சிஐஐ) மற்றும் அத்வைத் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரவி சாம் வரவேற்புரை வழங்கினார்.

நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி கலந்து கொண்டார்.
பின்னர், அவர் பேசுகையில், 'டி. எம் கிருஷ்ணா இசைக்கலைஞர் குடும்பத்திலிருந்து சிறு வயது முதலே கர்நாடக இசை ஞானம் பெற்ற கலைஞர். புகழ்பெற்ற மறைந்த செம்மங்குடி ஸ்ரீ நிவாச அய்யரிடம் ஏழு வருடங்களுக்கு மேல் சிறப்பு பயிற்சி பெற்றவர்.

இவருடைய முதல் சங்கீத நிகழ்ச்சி 12 வயதிலே தொடக்கி பல உயரங்களை கடந்து இன்று சிகரம் தொட்டது. இன்று இவருடைய இந்த மகசேசே விருது அவருடைய இசைக்கலைஞர் மாகுடத்தை உலகரியச் செய்தது' எனக் கூறினார்.
பின்னர், இசைக்கலைஞர் வித்வான் டி.எம் கிருஷ்ணனுக்கு, மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி பாராட்டி விருதினை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியினை, தென்னிந்திய கலை மற்றும் கலாச்சார அறக்கட்டளை, பாரதீய வித்யாபவன், ராஜலட்சுமி கலை நிறுவனம், மனோரஞ்சிதம் (அய்யப்பன் பூஜா சங்கம்), கோவை இசை சங்கம் மற்றும் அவியாசம் முதலிய நிறுவனங்கள் இணைத்து வழங்கின.
இதில், கர்நாடக வயலின் இசைக்கலைஞர் வித்வான் ஸ்ரீ ராம்குமார், இசைக்கலைஞர்கள் சுகுமார், நாகசுந்தரம், சிவகிருஷ்ணன், சந்திரசேகர் பகவதி, சிவராம குமார் மற்றும் பொது மக்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழக தலைவர்(சிஐஐ) மற்றும் அத்வைத் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரவி சாம் வரவேற்புரை வழங்கினார்.

நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி கலந்து கொண்டார்.
பின்னர், அவர் பேசுகையில், 'டி. எம் கிருஷ்ணா இசைக்கலைஞர் குடும்பத்திலிருந்து சிறு வயது முதலே கர்நாடக இசை ஞானம் பெற்ற கலைஞர். புகழ்பெற்ற மறைந்த செம்மங்குடி ஸ்ரீ நிவாச அய்யரிடம் ஏழு வருடங்களுக்கு மேல் சிறப்பு பயிற்சி பெற்றவர்.

இவருடைய முதல் சங்கீத நிகழ்ச்சி 12 வயதிலே தொடக்கி பல உயரங்களை கடந்து இன்று சிகரம் தொட்டது. இன்று இவருடைய இந்த மகசேசே விருது அவருடைய இசைக்கலைஞர் மாகுடத்தை உலகரியச் செய்தது' எனக் கூறினார்.
பின்னர், இசைக்கலைஞர் வித்வான் டி.எம் கிருஷ்ணனுக்கு, மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி பாராட்டி விருதினை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியினை, தென்னிந்திய கலை மற்றும் கலாச்சார அறக்கட்டளை, பாரதீய வித்யாபவன், ராஜலட்சுமி கலை நிறுவனம், மனோரஞ்சிதம் (அய்யப்பன் பூஜா சங்கம்), கோவை இசை சங்கம் மற்றும் அவியாசம் முதலிய நிறுவனங்கள் இணைத்து வழங்கின.
இதில், கர்நாடக வயலின் இசைக்கலைஞர் வித்வான் ஸ்ரீ ராம்குமார், இசைக்கலைஞர்கள் சுகுமார், நாகசுந்தரம், சிவகிருஷ்ணன், சந்திரசேகர் பகவதி, சிவராம குமார் மற்றும் பொது மக்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.