இசைக்கலைஞர் வித்வான் டி.எம் கிருஷ்ணா அவர்களுக்கு கோவையில் பாராட்டு விழா!

கோவை: ஆர்.எஸ் புரம் பாரதீய வித்யாபவன் பள்ளி கலையரங்கில் இன்று மாலை 6 மணியளவில் கர்நாடக இசையில் மகசேசே விருது பெற்ற இசைக்கலைஞர் வித்வான் டி.எம் கிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில், இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழக தலைவர்(சிஐஐ) மற்றும் அத்வைத் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரவி சாம் வரவேற்புரை வழங்கினார்.



நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி கலந்து கொண்டார். 

பின்னர், அவர் பேசுகையில், 'டி. எம் கிருஷ்ணா இசைக்கலைஞர் குடும்பத்திலிருந்து சிறு வயது முதலே கர்நாடக இசை ஞானம் பெற்ற கலைஞர். புகழ்பெற்ற மறைந்த செம்மங்குடி ஸ்ரீ நிவாச அய்யரிடம் ஏழு வருடங்களுக்கு மேல் சிறப்பு பயிற்சி பெற்றவர். 



இவருடைய முதல் சங்கீத நிகழ்ச்சி 12 வயதிலே தொடக்கி பல உயரங்களை கடந்து இன்று சிகரம் தொட்டது. இன்று இவருடைய இந்த மகசேசே விருது அவருடைய இசைக்கலைஞர் மாகுடத்தை உலகரியச் செய்தது' எனக் கூறினார்.

பின்னர், இசைக்கலைஞர் வித்வான் டி.எம் கிருஷ்ணனுக்கு, மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி பாராட்டி விருதினை வழங்கினார்.



இந்நிகழ்ச்சியினை, தென்னிந்திய கலை மற்றும் கலாச்சார அறக்கட்டளை, பாரதீய வித்யாபவன், ராஜலட்சுமி கலை நிறுவனம், மனோரஞ்சிதம் (அய்யப்பன் பூஜா சங்கம்), கோவை இசை சங்கம் மற்றும் அவியாசம் முதலிய நிறுவனங்கள் இணைத்து வழங்கின.

இதில், கர்நாடக வயலின் இசைக்கலைஞர் வித்வான் ஸ்ரீ ராம்குமார், இசைக்கலைஞர்கள் சுகுமார், நாகசுந்தரம், சிவகிருஷ்ணன், சந்திரசேகர் பகவதி, சிவராம குமார் மற்றும் பொது மக்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

⁠⁠⁠⁠

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...