கோவை அரசு பொது மருத்துவமனையில் இருதய மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை விரைவில் துவங்கப்படும்

கோவை அரசு பொது மருத்துவமனையில் செயல்படும் சிறுநீரக பிரிவு, இருதய சிகிச்சை பிரிவில் கூடியவிரைவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் திறந்த நிலை இருதய அறுவை சிகிச்சை முறை துவங்கப்படும் என அம்மருத்துவமனையின் டீன் எட்வின் ஜோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நமது நிருபரிடம் அவர் கூறியதாவது:-

கோவை அரசு பொது மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் திறந்த நிலை இருதய அறுவை சிகிச்சை துவங்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த விண்ணப்பம் சென்னை தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டு தற்போது ஆய்வில் உள்ளது. அங்கிருந்து அனுமதி வந்தவுடன் மேற்குறிப்பிட்ட அறுவை சிகிச்சைகள் துவங்கப்பட்டு விடும். டிசம்பர் மாதம் இறுதிக்குள் அனுமதி வழங்கப்படுவதாக தகவல் வந்துள்ளது. 

தனியார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று, இருதய சிகிச்சைகளுக்கு குறைந்தது சுமார் 3.5 லட்சம் ரூபாய் முதல் 4 லட்சம் ரூபாய் வரை செலவாகும். அரசு பொது மருத்துவமனையில் முதல்முறையாக துவங்கப்படும் இந்த சிகிச்சை மூலம் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் விண்ணப்பித்து ஏழை, எழிய மக்கள் மிகுந்த பயனடைவர். 

சிகிச்சைக்கான பயனாளர்கள் குறித்தும் பெயர் தேர்வு செய்யப்பட்டு தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான ஆய்வு முடிந்து சென்னையில் இருந்து நிதி வந்தவுடன் அறுவை சிகிச்சை துவங்கப்படும்'' என கோவை அரசு பொது மருத்துவமனை டீன் எட்வின் ஜோ தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...