கோவை அரசு பொது மருத்துவமனையில் செயல்படும் சிறுநீரக பிரிவு, இருதய சிகிச்சை பிரிவில் கூடியவிரைவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் திறந்த நிலை இருதய அறுவை சிகிச்சை முறை துவங்கப்படும் என அம்மருத்துவமனையின் டீன் எட்வின் ஜோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நமது நிருபரிடம் அவர் கூறியதாவது:-
கோவை அரசு பொது மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் திறந்த நிலை இருதய அறுவை சிகிச்சை துவங்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பம் சென்னை தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டு தற்போது ஆய்வில் உள்ளது. அங்கிருந்து அனுமதி வந்தவுடன் மேற்குறிப்பிட்ட அறுவை சிகிச்சைகள் துவங்கப்பட்டு விடும். டிசம்பர் மாதம் இறுதிக்குள் அனுமதி வழங்கப்படுவதாக தகவல் வந்துள்ளது.
தனியார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று, இருதய சிகிச்சைகளுக்கு குறைந்தது சுமார் 3.5 லட்சம் ரூபாய் முதல் 4 லட்சம் ரூபாய் வரை செலவாகும். அரசு பொது மருத்துவமனையில் முதல்முறையாக துவங்கப்படும் இந்த சிகிச்சை மூலம் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் விண்ணப்பித்து ஏழை, எழிய மக்கள் மிகுந்த பயனடைவர்.
சிகிச்சைக்கான பயனாளர்கள் குறித்தும் பெயர் தேர்வு செய்யப்பட்டு தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான ஆய்வு முடிந்து சென்னையில் இருந்து நிதி வந்தவுடன் அறுவை சிகிச்சை துவங்கப்படும்'' என கோவை அரசு பொது மருத்துவமனை டீன் எட்வின் ஜோ தெரிவித்தார்.
இதுகுறித்து நமது நிருபரிடம் அவர் கூறியதாவது:-
கோவை அரசு பொது மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் திறந்த நிலை இருதய அறுவை சிகிச்சை துவங்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பம் சென்னை தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டு தற்போது ஆய்வில் உள்ளது. அங்கிருந்து அனுமதி வந்தவுடன் மேற்குறிப்பிட்ட அறுவை சிகிச்சைகள் துவங்கப்பட்டு விடும். டிசம்பர் மாதம் இறுதிக்குள் அனுமதி வழங்கப்படுவதாக தகவல் வந்துள்ளது.
தனியார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று, இருதய சிகிச்சைகளுக்கு குறைந்தது சுமார் 3.5 லட்சம் ரூபாய் முதல் 4 லட்சம் ரூபாய் வரை செலவாகும். அரசு பொது மருத்துவமனையில் முதல்முறையாக துவங்கப்படும் இந்த சிகிச்சை மூலம் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் விண்ணப்பித்து ஏழை, எழிய மக்கள் மிகுந்த பயனடைவர்.
சிகிச்சைக்கான பயனாளர்கள் குறித்தும் பெயர் தேர்வு செய்யப்பட்டு தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான ஆய்வு முடிந்து சென்னையில் இருந்து நிதி வந்தவுடன் அறுவை சிகிச்சை துவங்கப்படும்'' என கோவை அரசு பொது மருத்துவமனை டீன் எட்வின் ஜோ தெரிவித்தார்.