500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் இந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதிலும், புதிய ரூபாயினை பெருவதிலும் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக புதிய ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதிலும் தாமதம் நிலவி வருகிறது. வங்கிகளிலும் நாள் ஒன்றுக்கு அதிகப்படியாக 2000 ரூபாய் மட்டுமே பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கியிலும், ஏடிஎம் இயந்திரங்களிலும் போதிய பணம் இல்லாததால் மக்கள் அன்றாட செலவுகளுக்கு கூட பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு, கோவை மாநகர காவல் துறை ஆணையத்தில் காவலர்கள் பயன்பாட்டிற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திறக்கப்பட்ட ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக காவல் துறை ஆணையர் ஏ.அமல்ராஜ் தற்போது அனுமதி வழங்கியுள்ளார்.
கோவை மாநகர காவல் துறை ஆணையரின் இந்த மனிதநேயமிக்க அறிவிப்பு பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாகவும், அவரது இந்த சமூகத்தின் மீதான அக்கரைக்கு பாராட்டுக்களை தெரிவிப்பதாவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக புதிய ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதிலும் தாமதம் நிலவி வருகிறது. வங்கிகளிலும் நாள் ஒன்றுக்கு அதிகப்படியாக 2000 ரூபாய் மட்டுமே பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கியிலும், ஏடிஎம் இயந்திரங்களிலும் போதிய பணம் இல்லாததால் மக்கள் அன்றாட செலவுகளுக்கு கூட பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு, கோவை மாநகர காவல் துறை ஆணையத்தில் காவலர்கள் பயன்பாட்டிற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திறக்கப்பட்ட ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக காவல் துறை ஆணையர் ஏ.அமல்ராஜ் தற்போது அனுமதி வழங்கியுள்ளார்.
கோவை மாநகர காவல் துறை ஆணையரின் இந்த மனிதநேயமிக்க அறிவிப்பு பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாகவும், அவரது இந்த சமூகத்தின் மீதான அக்கரைக்கு பாராட்டுக்களை தெரிவிப்பதாவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.