ஈரநெஞ்சம் அறக்கட்டளை பராமரிப்பில் உள்ள கோவை மாநகராட்சி ஆதரவற்றோர் முதியோர் காப்பகத்தில் அன்பு கூடல் நிகழ்ச்சி என்னும் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்டம் சூலூரில் அமைந்துள்ள மைக்கேல் ஜாப் பள்ளியைச் சேர்ந்த 60 ஆதரவற்ற குழந்தைகள் முதியோர் காப்பகத்திற்கு வந்திருந்தனர், இப்பள்ளியில் உள்ள குழந்தைகள் யாவரும் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களை சேர்ந்த ஆதரவற்ற குழந்தைகள் ஆவார்கள் .

பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள் மற்றும் பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகள் என அன்பு கூடல் நிகழ்வு அனைவரது இதயத்திலும் பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தியது.






மணிப்பூர், சிம்லா, குஜராத் சேர்ந்த குழந்தைகள் அவர்களது பாரம்பரிய பாடல்கள் பாடி முதியோர்களை மகிழ்விக்க, ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பாக தமிழ் நாட்டு பாரம்பரியமான சிலம்பாட்டம் மற்றும் ஆடல் பாடல்கள், மேஜிக் நிகழ்ச்சி என பல நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நிறைவாக, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ஜெயாமாகேஷ் முதியவர்களும், குழந்தைகளும் மனதார அன்பு கலந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
காப்பகத்திற்கு பலதரப்பட்ட மக்கள் வருவது இயல்பு, பல நிகழ்சிகள் அரங்கேற்றம் ஆவதும் இயல்பு. ஆனால் ஆதரவற்ற குழந்தைகள், ஆதரவற்ற முதியோர் காப்பகத்திற்கு வந்து அங்குள்ள முதியோர்களை மகிழ்விக்கும் பொழுது மனதில் ஒரு இனம் புரியாத ஒரு தெளிவும் ஆறுதலும், மனதில் நிறைவும் ஏற்படுத்துகிறது. அது மட்டும் அல்லாது யாரும் ஆதரவற்றவர்கள் இல்லை, ஆதரவுற்றோர் தான் என்பதும் வெளிப்படுத்துகிறது.

இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்டம் சூலூரில் அமைந்துள்ள மைக்கேல் ஜாப் பள்ளியைச் சேர்ந்த 60 ஆதரவற்ற குழந்தைகள் முதியோர் காப்பகத்திற்கு வந்திருந்தனர், இப்பள்ளியில் உள்ள குழந்தைகள் யாவரும் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களை சேர்ந்த ஆதரவற்ற குழந்தைகள் ஆவார்கள் .

பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள் மற்றும் பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகள் என அன்பு கூடல் நிகழ்வு அனைவரது இதயத்திலும் பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தியது.






மணிப்பூர், சிம்லா, குஜராத் சேர்ந்த குழந்தைகள் அவர்களது பாரம்பரிய பாடல்கள் பாடி முதியோர்களை மகிழ்விக்க, ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பாக தமிழ் நாட்டு பாரம்பரியமான சிலம்பாட்டம் மற்றும் ஆடல் பாடல்கள், மேஜிக் நிகழ்ச்சி என பல நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நிறைவாக, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ஜெயாமாகேஷ் முதியவர்களும், குழந்தைகளும் மனதார அன்பு கலந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
காப்பகத்திற்கு பலதரப்பட்ட மக்கள் வருவது இயல்பு, பல நிகழ்சிகள் அரங்கேற்றம் ஆவதும் இயல்பு. ஆனால் ஆதரவற்ற குழந்தைகள், ஆதரவற்ற முதியோர் காப்பகத்திற்கு வந்து அங்குள்ள முதியோர்களை மகிழ்விக்கும் பொழுது மனதில் ஒரு இனம் புரியாத ஒரு தெளிவும் ஆறுதலும், மனதில் நிறைவும் ஏற்படுத்துகிறது. அது மட்டும் அல்லாது யாரும் ஆதரவற்றவர்கள் இல்லை, ஆதரவுற்றோர் தான் என்பதும் வெளிப்படுத்துகிறது.