மாநகராட்சி தெற்கு பகுதியில் ரூ.1.44 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தமிழக முதலமைச்சரின் வளர்ச்சித் திட்டப் பணிகளின் திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட 88, 89, 90, 91, 92, 93 ஆகிய வார்டு பகுதிகளில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரூ.1.44 கோடி மதிப்பீட்டிலான திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி 93 வது வார்டில் சக்தி நகர் பகுதியில் ரூ.31.50 லட்சம் மதிப்பில் பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டுத் திடல் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையினையும், 88-வது வார்டுக்கு உட்பட்ட சுண்டக்காமுத்தூர் பிரதான சாலை மற்றும் பழனி ஆண்டவர் கோவில் வீதியில் ரூ.42.50 லட்சம் மதிப்பிலான வடிகால் கட்டும் பணியையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து, கோனியம்மன் கோவில் வீதியில் ரூ.31.50 லட்சம் மதிப்பில் வடிகால் கட்டும் பணியையும், 89வது வார்டு இராமசெட்டிபாளையம் பகுதியில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பயணியர் நிழற்குடை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையினையும் துவக்கி வைத்தார்.



இதைத்தொடர்ந்து, 90-வது வார்டுக்கு உட்பட்ட கோவைப்புதூர் என்.பிளாக் பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டுத் திடலை திறந்து வைத்தார். பின், அதேப் பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தினை பார்வையிட்டு உணவு பரிமாறினார்.



பின், 91-வது வார்டு குளத்துப்பாளையம் பள்ளி அருகில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பயணியர் நிழற்கூடை  அமைக்கும் பணியினையும், மகாலட்சுமி நகர் குமரன் ஹால் அருகில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பயணியர் நிலற்குடை பணியினையும் துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, 92-வது வார்டு சக்தி விநாயகர் கோவில் பகுதியில் 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான அங்கன்வாடி கட்டிட மையத்தை துவக்கி வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்வின் போது, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், துணை ஆணையர் ப.காந்திமதி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...