500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததைக் கண்டித்து திங்களன்று (இன்று) நாடு தழுவிய அளவில் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக ஆகிய கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டன. இதனிடையே, சென்னை நுங்கம்பாக்கத்தில் திமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதனைத்தொடர்ந்து, மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், திமுக பொருளாளர் ஸ்டாலினை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்து கோவை அரசு பொது மருத்துவமனை முன்பு திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொங்கலூர் பழனிச்சாமி முன்னிலையில் போராட்டம் நடைபெற்றது.




இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொங்கலூர் பழனிச்சாமி உட்பட பலரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக ஆகிய கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டன. இதனிடையே, சென்னை நுங்கம்பாக்கத்தில் திமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதனைத்தொடர்ந்து, மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், திமுக பொருளாளர் ஸ்டாலினை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்து கோவை அரசு பொது மருத்துவமனை முன்பு திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொங்கலூர் பழனிச்சாமி முன்னிலையில் போராட்டம் நடைபெற்றது.




இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொங்கலூர் பழனிச்சாமி உட்பட பலரை காவல்துறையினர் கைது செய்தனர்.