500, 1000 ரூபாய் நோட்டு தடையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலினை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்து கோவையில் ஆர்ப்பாட்டம்

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததைக் கண்டித்து திங்களன்று (இன்று) நாடு தழுவிய அளவில் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக ஆகிய கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டன. இதனிடையே, சென்னை நுங்கம்பாக்கத்தில் திமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதனைத்தொடர்ந்து, மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், திமுக பொருளாளர் ஸ்டாலினை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்து கோவை அரசு பொது மருத்துவமனை முன்பு திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொங்கலூர் பழனிச்சாமி முன்னிலையில் போராட்டம் நடைபெற்றது.









இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொங்கலூர் பழனிச்சாமி உட்பட பலரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...