கோவையில் அரசு உத்தரவுப்படி மூடப்பட்ட பள்ளிகள் தற்போது அனுமதியின்றி செயல்படுவதாக ஆம் ஆத்மி கட்சியினர் புகார்

கோவை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் பல்வேறு தனியார் பள்ளிகள் அரசின் முறையான அனுமதி பெறாமல் செயல்படுவதாகவும், அவ்வாறு செயல்படும் பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டும் தற்போது எவ்வித உத்தரவுமின்றி செயல்படுவதாகவும் கூறி கோவை மாவட்ட ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் முஹம்மது ரஃபி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.



அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

அனுமதி பெறாததாலும், முறையான கட்டமைப்பு இல்லாததாலும், முறைப்படி அனுமதியினை புதுப்பிக்காததாலும் தமிழக அரசு உத்தரவுப்படி அன்றைய கோவை மாவட்ட ஆட்சியராக செயல்பட்ட கருணாகரன் பல பள்ளிகளை மூட உத்தரவிட்டார். 

இருப்பினும் தற்போது அந்த பள்ளிகள் எவ்வித அனுமதியும் இன்றி செயல்பட்டு வருகிறது. இது மாவட்டக் கல்வித் துறைக்கு தெரிந்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. பெற்றோர்களும் இதுகுறித்து அறியாமல் தங்களது குழுந்தைகளை அந்த பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். பள்ளி நிர்வாகம் ஆயிரக்கணக்கான ரூபாயினை பெற்றோர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டு முறைப்படி அனுமதியின்றி செயல்பட்டு வருகிறது.

எனவே, கோவை மாவட்ட ஆட்சியர் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொண்டு அனுமதி புதுப்பித்தல், ஆய்வகம், கழிப்பறை, சுற்றுச் சுவர் போன்ற அடிப்படை வசதிகள் முறைப்படி உள்ளனவா ? என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

அனுமதி பெற்ற பள்ளிகள் தங்களது அங்கீகாரம் பற்றிய அனுமதிக் கடிதத்தை தகவல் பலகையில் பெற்றோர்களுக்கு தெரியும் வகையில் அமைக்க வேண்டும்.

கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ் பல பள்ளிகளில் இட ஒதுக்கீடுகள்  செய்யப்படுவதில்லை. அதனை ஆய்வு செய்து இடஒதுக்கீட்டினை உறுதிசெய்ய வேண்டும்.

அனைத்து பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமிராவினை பொருத்த காட்டாயப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...