கோவை மாவட்ட வார்டு எண் 55, பாப்பநாயக்கன் பாளையத்திற்கு உட்பட்ட ஜி.கே.டி நகர் பகுதியில் உள்ள தெருவிளக்கு திரும்பிய நிலையில் உள்ளாதால், இரவு நேரங்களில் அந்த வழியாக பயணிக்கும் பெண்கள் இருள் சூழ்த நிலையிலேயே அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. மேலும், வாகனஓட்டிகளும் மிகுந்த சிரமத்தில் அந்த சாலையை கடந்து செல்கின்றன.



மேலும், அதேப் பகுதியில் நான்கு முனை சாலை சந்திப்பில் மின் கம்பம் ஒன்று பராமரிப்பின்றி கடந்த 50 நாட்களுக்கு முன்பு சாய்ந்துள்ளது.

எந்த நேரத்திலும் கீழே விழும் நிலையில் உள்ள அதனை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மின்சாரத்துறையினர் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.