கோவையை சேர்ந்த தனபால் என்ற வாலிபருக்கு கடந்த 19ம் தேதி விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து அவர் சிங்காநல்லூரில் உள்ள முத்தூஸ் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது மூளை இறந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். தொடர்ந்து தனபாலின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தார் முன்வந்தனர். அவரது இருதயம் சென்னையில் உள்ள மலர் போடிஸ் (Malar Fortis) என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருதய நோயாளிக்கு அனுப்பப்பட்டது.
இதற்காக கோவையில் இருந்து விமானம் மூலம் இருதயம் சென்னை கொண்டு செல்லப்பட்டது. மேலும் தனபாலின் கல்லீரல் மற்றும் சிறு நீரகங்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டன.
