கோவை மாநகராட்சி, 29-வது வார்டுக்குட்பட்ட சிவானந்தபுரம் பகுதியில் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தை தண்ணீர் தொட்டியில் ஊற்றுவதையும், தேவையில்லாத பொருட்களை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபடுவதையும் மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, 28-வது வார்டுக்கு உட்பட்ட சரவணம்பட்டி, ஜிகேஎஸ் நகர் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக பிரித்தெடுக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருவதை மாநகராட்சி துணை ஆணையர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வின் போது மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதியுடன் நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி, வடக்கு மண்டல உதவி ஆணையர் சரவணக்குமார் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.