ரூபாய் நோட்டு விவகாரத்தில் ஏற்பட்டுள்ள வணிக முடக்கத்தை மத்திய அரசு தீர்க்கக் கோரி தமிழகம் முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டம்


500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8ம் தேதியன்று இரவு பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார். இதனால், தற்போது தமிழகத்தில் வணிகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இதனைத்தொடர்ந்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.





அதன்படி கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் கோவை மண்டலத் தலைவர் டி.ஆர்.சந்திரசேகரன் முன்னிலையில், நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் தற்போது புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டு மட்டுமே  வெளியிடப்பட்டுள்ளது. உடனடியாக புதிய 500 ரூபாய் நோட்டினை அதிகளவில் மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும்.

வணிகர்கள் மற்றம் தொழில் முனைவோருக்கு நடப்புக் கணக்கில் வாரம் ஒருமுறை ரூ.50 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்ற வரம்பை உயர்த்தி 2 லட்சம் ரூபாய் வரையிலும் எடுக்க அனுமதிக்க வேண்டும்.

சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் சிறிய, நடுத்தர வணிகர்கள் வாரத்திற்கு ரூ.50 ஆயிரம் இருப்பில் இருந்து எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். விவசாயிகள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி தேவைக்கேற்ப வங்கிகள் மூலமும், ஏடிஎம் இயந்திரம் மூலமும் பணம் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...