டி.ஐ.இ சார்பில் கோவையில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் மாரத்தான் போட்டி


ஸ்டார்ட் ஸ்ட்ரைடு ‘Startup Strides’ என்னும் மாரத்தான் ஓட்டப் போட்டி வரும் டிசம்பர் 4ம் தேதியன்று கோவையில் நடைபெற உள்ளது. கோவை மாவட்ட டி.ஐ.இ சார்பில் இந்நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. டி.ஐ.இ வளரும் தொழில் நிறுவனங்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறது.

இந்த மாரத்தான் கோவை மட்டுமல்லாது, சன்டிகர், தில்லி, ஹைதராபாத், கேரளா, நாக்பூர், ராஜஸ்தான் மற்றும் தம்பாபே உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, டி.ஐ.இ கோவை மாவட்ட தலைவர் ஜி.கார்த்திகேயன் கூறியதாவது:-

இந்த மாரத்தான் நிகழ்வு பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு ஒரு சந்திப்பு நிகழ்ச்சியாக அமையும். புதிய தொழில் முனைவோர்களுக்கும் இது ஒரு விழிப்புணர்வாக இருக்கும். கோவை மாவட்டமானது தொழில் முனைவோர்களுக்கு ஒரு சிறந்த பகுதியாக உள்ளது. நாங்கள் அதை மேலும் ஊக்கப்படுத்த முடிவெடுத்துள்ளோம்'' என்றார்.

ஸ்டார்ட் ஸ்ட்ரைடு மாரத்தான் தலைவரும், பார்க் கல்விக் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான அனுஷா ரவி கூறியதாவது :-

இந்நிகழ்ச்சி பல லட்ச தொழில் முனைவோர்களின் பல்வேறு கனவுகளை குறித்ததாகும். இந்த நிகழ்ச்சியின் மூலம் இளைய தொழில் முனைவோர்களுக்கு ஒரு வழிகாட்டுதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பங்கேற்க அனைவரையும் அழைக்கிறோம்'' என்றார்.

இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்ற http://youtoocanrun.com/races/?ee=680 என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...