கோவை மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் ஓய்வூதியதாரார்களின்
கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஓய்வு
பெற்ற அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமையில் ஆர்ப்பாட்டம்
இன்று நடைபெற்றது.

அதில், 2016ம் ஆண்டில் அமல்படுத்தும் வகையில் 8வது ஊதியக்குழுவை அமைத்தல், வல்லுநர் குழு அறிக்கையை உடனடியாக வெளியிடுதல், புதிய பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை இரத்து செய்தல், முதல்வர் மற்றும் நிதியமைச்சர் ஆகியவர்களால் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட அடையாள அட்டையை வழங்குதல், இராணுவ வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு இரட்டை குடும்ப ஓய்வூதியம் வழங்குதல், புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பாடு மறுக்கப்படும் நிலையில், கட்டாய ஓய்வூதியம் பிடித்தம் செய்வதிலிருந்து விலக்களித்து திட்டத்திலிருந்து விலகுவதற்கு அனுமதி அளித்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இதில், கோவை மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ரங்கராஜ், மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், பொருளாளர் ராஜேஸ்வரன், முன்னாள் மாநிலத் தலைவர் சுப்பிரமணியம், முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் சுப்பிரமணியம் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், கிளைத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதில், 2016ம் ஆண்டில் அமல்படுத்தும் வகையில் 8வது ஊதியக்குழுவை அமைத்தல், வல்லுநர் குழு அறிக்கையை உடனடியாக வெளியிடுதல், புதிய பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை இரத்து செய்தல், முதல்வர் மற்றும் நிதியமைச்சர் ஆகியவர்களால் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட அடையாள அட்டையை வழங்குதல், இராணுவ வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு இரட்டை குடும்ப ஓய்வூதியம் வழங்குதல், புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பாடு மறுக்கப்படும் நிலையில், கட்டாய ஓய்வூதியம் பிடித்தம் செய்வதிலிருந்து விலக்களித்து திட்டத்திலிருந்து விலகுவதற்கு அனுமதி அளித்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இதில், கோவை மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ரங்கராஜ், மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், பொருளாளர் ராஜேஸ்வரன், முன்னாள் மாநிலத் தலைவர் சுப்பிரமணியம், முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் சுப்பிரமணியம் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், கிளைத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.