ஓய்வூதியதாரார்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் ஓய்வூதியதாரார்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. 



 அதில், 2016ம் ஆண்டில் அமல்படுத்தும் வகையில் 8வது ஊதியக்குழுவை அமைத்தல், வல்லுநர் குழு அறிக்கையை  உடனடியாக வெளியிடுதல், புதிய பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை இரத்து செய்தல், முதல்வர் மற்றும் நிதியமைச்சர் ஆகியவர்களால் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட அடையாள அட்டையை வழங்குதல், இராணுவ வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு இரட்டை குடும்ப ஓய்வூதியம் வழங்குதல், புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பாடு மறுக்கப்படும் நிலையில், கட்டாய ஓய்வூதியம் பிடித்தம் செய்வதிலிருந்து விலக்களித்து திட்டத்திலிருந்து விலகுவதற்கு அனுமதி அளித்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

இதில், கோவை மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ரங்கராஜ், மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், பொருளாளர் ராஜேஸ்வரன், முன்னாள் மாநிலத் தலைவர் சுப்பிரமணியம், முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் சுப்பிரமணியம் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், கிளைத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...