
கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் கோவை மாவட்டம், மதுக்கரை சாலையில் அமைந்துள்ள மாநகராட்சிக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் நர்சரி துவக்க விழா நடைபெற்றது.




இதில், பொள்ளாச்சி சாலை விரிவுபடுத்தும் பணிக்காக இடமாற்றம் செய்யப்பட்ட மரங்களில் ஒரு மரம் இந்த இடத்தில் ஏற்கனவே நடப்பட்டிருந்தது. அதனுடன், தற்போது மீண்டும் ஒரு மரம் கோவை- பொள்ளாச்சி சாலையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு இந்த இடத்தில் நடப்பட்டுள்ளது.

இங்கு பராமரிக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படும் மரங்கள் மாநகராட்சிக்கு சொந்தமான மற்ற இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயனுடன், பொள்ளாச்சி துணை ஆட்சியர் காயத்ரி, ஓசை மற்றும் பசுமைதேசம் தன்னார்வலர் அமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.