பொள்ளாச்சி - போத்தனூர் அகல ரயில்வே பாதை பணிகள் குறித்து தென்னக ரயில்வேத் துறை பொது மேலாளர் ஆய்வு

பொள்ளாச்சி - போத்தனூர் அகல ரயில்வே பணிகள் குறித்து தென்னக ரயில்வே பொது மேலாளர் வசிஸ்ட்ட ஜோகிரி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பொள்ளாச்சி மற்றும் போத்தனூர் ரயில்வே பாதை அகல பாதையாக மாற்றும் பணி கடந்த 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பணிகள் சுமார் ரூ.600 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டது. இதில் பொள்ளாச்சி - திண்டுக்கல், பொள்ளாச்சி - பாலக்காடு இடையேயான அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்து ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

மேலும், 2010-ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லாததால் பொள்ளாச்சி- போத்தனூர் இடையேயான ரயில்வே பணிகள் மிகவும் மந்தமான நிலையில் நடைபெற்று வந்தது. இதைத் தொடர்ந்து கூடுதலாக ரூ.100 கோடியினை மத்திய அரசு ஒதுக்கியது. இதையடுத்து தற்போது பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. 



இந்நிலையில், பொள்ளாச்சி போத்தனூர் இடையேயான அகல ரயில் பாதையில் தென்னக ரயில்வே மேலாளர் வசிஸ்ட்ட ஜோகிரி நேரில் சென்று ஆய்வு செய்தார். பின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''பொள்ளாச்சி- போத்தனூர் இடையிலான ரயில்வேப் பாதைப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துவிடும். ஜனவரி இறுதிக்குள் பணிகள் முடிவடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...