பொள்ளாச்சி - போத்தனூர் அகல ரயில்வே பணிகள் குறித்து தென்னக ரயில்வே பொது மேலாளர் வசிஸ்ட்ட ஜோகிரி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பொள்ளாச்சி மற்றும் போத்தனூர் ரயில்வே பாதை அகல பாதையாக மாற்றும் பணி கடந்த 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பணிகள் சுமார் ரூ.600 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டது. இதில் பொள்ளாச்சி - திண்டுக்கல், பொள்ளாச்சி - பாலக்காடு இடையேயான அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்து ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
மேலும், 2010-ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லாததால் பொள்ளாச்சி- போத்தனூர் இடையேயான ரயில்வே பணிகள் மிகவும் மந்தமான நிலையில் நடைபெற்று வந்தது. இதைத் தொடர்ந்து கூடுதலாக ரூ.100 கோடியினை மத்திய அரசு ஒதுக்கியது. இதையடுத்து தற்போது பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பொள்ளாச்சி போத்தனூர் இடையேயான அகல ரயில் பாதையில் தென்னக ரயில்வே மேலாளர் வசிஸ்ட்ட ஜோகிரி நேரில் சென்று ஆய்வு செய்தார். பின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''பொள்ளாச்சி- போத்தனூர் இடையிலான ரயில்வேப் பாதைப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துவிடும். ஜனவரி இறுதிக்குள் பணிகள் முடிவடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.

பொள்ளாச்சி மற்றும் போத்தனூர் ரயில்வே பாதை அகல பாதையாக மாற்றும் பணி கடந்த 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பணிகள் சுமார் ரூ.600 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டது. இதில் பொள்ளாச்சி - திண்டுக்கல், பொள்ளாச்சி - பாலக்காடு இடையேயான அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்து ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
மேலும், 2010-ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லாததால் பொள்ளாச்சி- போத்தனூர் இடையேயான ரயில்வே பணிகள் மிகவும் மந்தமான நிலையில் நடைபெற்று வந்தது. இதைத் தொடர்ந்து கூடுதலாக ரூ.100 கோடியினை மத்திய அரசு ஒதுக்கியது. இதையடுத்து தற்போது பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பொள்ளாச்சி போத்தனூர் இடையேயான அகல ரயில் பாதையில் தென்னக ரயில்வே மேலாளர் வசிஸ்ட்ட ஜோகிரி நேரில் சென்று ஆய்வு செய்தார். பின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''பொள்ளாச்சி- போத்தனூர் இடையிலான ரயில்வேப் பாதைப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துவிடும். ஜனவரி இறுதிக்குள் பணிகள் முடிவடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.
