மழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க 1077 இலவச அழைப்பு, மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !


கன மழை காரணமாக எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் மாவட்டத்தில் 31 இடங்கள் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என கண்டறியபட்டுள்ளதாகவும் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆட்சியர் ஹரிஹரன்,வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க 1077 என்ற இலவச அழைப்பு எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்டம் முழுவதும் 31 இடங்கள் வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என கணக்கிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் முன்னெச்சரிக்கை,மீட்பு  மற்றும் தேடுதல் பணி ஆகியவற்றுக்காக 4 வகை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் 31 இடங்களிலும் நிவாரண முகாம் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர்,கோவை மாவட்ட நிர்வாகம் எந்த நிலையையும் சமாளிக்கும் வகையில் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...