கோவையில் 65 மில்லி மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு : வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய துறை தலைவர் தகவல்


கடந்த புதன்கிழமை அதிகாலை வங்கக் கடலில் உருவாகிய நாடா புயல் தமிழக கடலோர பகுதிகளை நெருங்கும் இந்த நேரத்தில் 'நாடா புயல்' படிப்படியாக  வலுவிழக்கும் என்றும்  நாளை அதிகாலை கரையை கடக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் காரணமாகதமிழகத்தின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்துவருகிறது.

இந்த நிலையில், நாடா புயலின் தாக்காத்தால் கோவையில் கணிசமான அளவு மழை பெய்யும் என்று கோவை வேளாண்மை பலகலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய துறை தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நமக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும்.




மழை குறைவு

இந்த காலத்தில் கோவையில் மட்டும் 323 மில்லி மீட்டர் பெய்யும். ஆனால் சென்ற பருவ மழையின் போது கோவையில் 96 மில்லி மீட்டர் மழை மட்டுமே பதிவானது. சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 674 மில்லி மீட்டர் மழை கோவையில் பெய்து வருகிறது. கால மாற்றத்திற்கு ஏற்ப பருவகால மழைகளின் அளவுகள் சிறிது மாறுபடலாம். ஆனால், கடந்த 30 வருடங்களில் இல்லாத அளவுக்கு கோவையில் இந்த வருடம் மழையின் அளவு மிகவும்  குறைந்துள்ளது. அதன்படி, நடப்பு ஆண்டில் கோவையில் 227 மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது.

‘நாடா புயல்’

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள நாடா புயலால் கோவைக்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால், வரும் 2,3 மற்றும் 5ம் தேதிகளில் கோவையில் அனேக இடங்களில் மழை பெய்யும். சுமார் 65 மில்லி மீட்டார் வரை கோவையில் மழை பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 5ம் தேதிக்குப் பிறகு 2 முதல் 3 நாட்களுக்கு மழை இருக்காது. அதனைத் தொடர்ந்து மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தற்போதைய கணக்கீட்டின் படி மழை பெய்தாலும் வருடாந்திர மழையின் சராசரி அளவை எட்டுவது மிக கடினம். 

மக்கள் தொகை பெருக்கம், தொழிற்சாலை கழிவுகள், மரங்களை வெட்டுதல் போன்ற காரணத்தால் கார்பன்டை ஆக்சைடு மற்றும் மீதேன் வாயு போன்றவை அதிகரித்து வளிமண்டலத்தை வெப்பமடைய செய்கின்றன.சிறு வயதில் இருந்தே மழைக்கான முக்கியத்துவத்தையும், அது தடைபடுவதற்கான காரணத்தையும் குழந்தைகளுக்கு தெரியப்படுத்தி வளர்க்க வேண்டும். மரங்களை நடவு செய்ய பழக்க வேண்டும். அப்போது தான் வரும் காலத்தில் மழையின் அளவு குறைவதை தடுக்க முடியும்.

இவாறு அவர் கூறினார். 

மழை நிலவரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் கூறியதாவது :-  

வங்கக்கடலில் உருவாகியுள்ள  நாடா புயலை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுள்ளது. மழை பாதிப்பு தொடர்பாக 1077 என்ற தொலைபேசி எண்ணை மக்கள் தொடர்பு கொள்ளலாம். மேலும், கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், பவானி ஆற்றுப்பகுதி, பேரூர் உள்ளிட்ட 31 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அசம்பாவிதம் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளவும், மக்களை பாதுகாக்கவும் 4  தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மழை பாதிப்புகள் ஏற்படும்பட்சத்தில் அதனை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...