காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான தூய்மை இந்தியா விழிப்புணர்வு சைக்கிள் பயணம் டிச. 6-யில் கோவை வருகை


தூய்மை இந்தியா திட்டத்தின் விழிப்புணர்வுக்காக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணத்தில் பங்கேற்றுள்ள வீரர்கள் வரும் டிசம்பர் 6ம் தேதியன்று கோவைக்கு வருகின்றனர்.

மக்களிடம் சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் மிட் டவுன் சார்பில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான சைக்கிள் பயணம் நடைபெற்று வருகிறது.

இந்தப் பயணம் கடந்த நவம்பர் 7-ம் தேதியன்று காஷ்மீரில் துவங்கியது. ஒரு மாதம் வரை நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்ட இந்தப் பயணம் வரும் டிசம்பர் 9-ம் தேதியன்று கன்னியாகுமரியில் முடிவடைகிறது. 

ரோட்டரி அறக்கட்டளை துவங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி நடைபெறும் இந்தத் தொலைதூர சைக்கிள் பயணத்தில் 22 சைக்கிள் பந்தய வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் ஒரு மாதகாலப் பயணத்தில் சுமார் 4500 கிலோ மீட்டர் சைக்கிள் மூலம் கடந்து வருகின்றனர்.

இவர்கள் தற்போது தில்லி, ஜெய்பூர், காந்திநகர், மும்பை, பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரி மாவட்டத்தை அடைய திட்டமிட்டுள்ளனர். இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக சைக்கிள் பயணக் குழு வரும் டிசம்பர் 6ம் தேதியன்று கரூர் வழியாக கோவையை வந்து அடைகிறது. இதைத்தொடர்ந்து, இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு கோவை அவினாசி சாலையில் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மற்றும் கோவை மாநகராட்சி அலுவலர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பின், இந்த சைக்கிள் பயண வீரர்கள் மீண்டும் தங்களின் பயணத்தை டிசம்பர் 7-ம் தேதியன்று காலை வஉசி பூங்கா மைதானத்தில் இருந்து துவங்குகின்றனர். சுத்தம் மற்றும் சுகாதாரத்தை வலியுறுத்தும் இந்த விழாவில் கோவை மாநகராட்சி அலுவலர்கள், ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் மிட்டவுன் தலைமையில் மேலும் 22 ரோட்டரி சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், கோவை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பாரி மற்றும் ரோட்டரி மாவட்ட ஆளுநர் பிரகாஷ் சந்திரன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இந்த சைக்கிள் பயணக் குழுவுடன் கோவை மற்றும் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த 50 சைக்கிள் வீரர்களும் பங்கேற்க உள்ளனர். இவர்களைத் தவிர சுமார் 150 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரும் இந்த சைக்கிள் பயணத்தில் பங்கேற்று 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணம் செய்ய உள்ளனர்.

சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த நெடுந்தொலைவு சைக்கிள் பயணத்துக்கு மத்திய நகர்புற மேம்பாட்டுத் துறை தனது ஆதரவை தெரிவித்துள்ளது. இதுகுறித்தான மேலும் விபரங்களுக்கு www.tourderotary.com அல்லது [email protected] என்ற இணையதளத்தையும், 9994402004, 9842233732 என்ற தொலைபேசி எண்ணையும் தொடர்புகொள்ளலாம்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...