முழுமையான ஊதியம் வழங்கக் கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் அன்றாட செலவுகளுக்கு பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். பணப் பரிவர்த்தனையும் கட்டுப்பாட்டில் உள்ளதால் நிறுவனங்களில் ஊழியர்களுக்கு ஊதியம் தருவதில் பிரச்சனைகள் நிலவி வருகிறது.

அதன்படி, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தற்போது மாத ஊதியமாக 3 ஆயிரம் ரூபாய் மட்டுமே ரொக்கமாக தரப்பட்டுள்ளது. மீதி தொகை ஊழியர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் பாதித் தொகை மட்டுமே ஊழியர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், முழுமையான ஊதியத்தை உடனடியாக தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.





அதன் ஒரு பகுதியாக கோவை உக்கடம் அரசு போக்குவரத்து பேருந்து பனிமனையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஊழியர் மேற்கொண்ட பணிக்கான ஊதியத்தை உடனடியாக முழுத் தொகையினை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...