குறிச்சி குளத்தில் கழிவுகள் கொட்டிய வாகனத்தை சிறைபிடித்த பாதுகாப்பு இயக்கத்தினர்


கோவை மாவட்டம் பொள்ளாச்சி சாலை சுந்தராபுரம் அருகே அமைந்துள்ளது குறிச்சி குளம். சரியான மழைப்பொழிவு இல்லாததாலும், ஆகாயத் தாமரைகளின் அதிகப்படியான வளர்ச்சியினாலும் இக்குளம் வரண்டு காணப்படுகிறது. தற்போது, பல தொழிற்சாலை நிறுவனத்தினர் தங்களது கழிவுகளை இக்குளத்தில் கொட்டி வருவதாலும் சுகாதாரமின்றி காணப்படுகிறது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்புதான், இந்த குறிச்சி குளத்தின் கரையோரம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பகுதிகள் மீட்கப்பட்டு, குளம் தூர்வாரப்பட்டது. 

இந்நிலையில், இன்று குறிச்சி குளத்தில் வாகனம் மூலம் தொழிற்சாலைக் கழிவுகளை கொட்ட முற்பட்டனர். அதனைக் கண்ட குறிச்சி குளம் பாதுகாப்பு இயக்கத்தினர் கழிவுகளை கொட்டிய அந்த வாகனத்தை சிறை

பிடித்து பொதுப்பணித் துறைக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.





இதைத்தொடர்ந்து, சுமார் மூன்று மணி நேரம் கடந்தும் எந்த அதிகாரியும் அப்பகுதிக்கு வராததால் குப்பை கொட்டிய நபரிடமே அதனை எடுக்க வைத்து, பின் எச்சரித்து அனுப்பப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...