கோவையில் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான கிரிக்கெட் போட்டி




உலக மாற்று திறனாளிகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை பங்கஜா மில்ஸ் மைதானத்தில் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான மண்டல அளவிலான கிரிக்கெட்  போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கரூர், ஈரோடு, சேலம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, விருதுநகர், தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள்  பங்கேற்கின்றனர். 

இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டிகள் லீக் சுற்று முறையில் நடக்கிறது. ஒவ்வொரு அணியும் 20 ஓவர்கள் விளையாடுவர். இதில் அதிக புள்ளிகள் பெறும் அணிகள் நாளை நடைபெறும் இறுதி போட்டியில் விளையாடும் எனவும், இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி மாநில அளவிலான பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான அணியில் கலந்து கொள்ளும் என போட்டி ஒருங்கினைப்பாளர்கள் தெரிவித்தனர். 



மேலும் இப்போட்டியில் பங்கேற்பவர்கள்  100 சதவீதம் பார்வை குறைபாடு உள்ளவர்கள், 60 சதவீதம் மற்றும் 40 சதவீதம் பார்வை குறைபாடு உள்ளவர்கள் என 3 பிரிவுகளாக ஒவ்வொரு போட்டிகளிலும் 14 வீரர்கள்  பங்கேற்பார்கள் எனவும் தெரிவித்தனர். ஒலி எழுப்பும் பிளாஸ்டிக் பந்துகள் இப்போட்டிக்கு உபயோகிக்க  படுவதாக தெரிவித்தவர்கள் இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை பரஸ்பரம் தனியார் தொண்டு நிறுவனம் சுடர் ஒளி மற்றும் தமிழ்நாடு பார்வையற்றோர் கழகம் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தனர்.நாளை மாலை இறுதி போட்டிக்கு பின்னர் வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...