கே.எம்.சி.எச் மருத்துவமனை சார்பில் பெண் காவல்துறையினருக்கு இலவச மருத்துவ முகாம்

கே.எம்.சி.எச் மருத்துவமனை சார்பில் பெண்களுக்கான மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் இலவச விழிப்புணர்வு முகாம் கோவை காவலர் பயிற்சிப் பள்ளி அரங்கத்தில் இன்று நடைபெற்றது. முகாமினை கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் துவங்கி வைத்தார். 


பின்னர், அவர் பேசுகையில்:-
பெண்கள் பலர் தங்களது உடல் ஆரோக்கியத்தை பற்றி கண்டுகொள்வதில்லை. மருத்துவர்களின் ஆலோசனைப்படி நடப்பதன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்பு வராமல் தடுக்க முடியும். இன்றைய தொழில்நுட்பத்தின் மூலம் 100 சதவீதம் வரை பல்வேறு வகையான புற்றுநோய்களை குணப்படுத்த முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், கிராமப்புறத்தில் உள்ள பெண்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கே.எம்.சி.எச் மருத்துவமனை நடத்துகிறது. 



இன்று கே.எம்.சி.எச் மருத்துவமனை நடத்தும் இம்முகாமில் கோவை காவலர் பயிற்சிப் பள்ளியில் உள்ள பெண் காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் அதுமட்டுமல்லாமல், இந்த விழிப்புணர்வு பற்றி உங்களுக்கு தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கவேண்டும் எனக் கூறினார்.  

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...