கோவையில் நடமாடும் மக்கள் குறைதீர்க்கும் வாகனத்தை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலத்தில் நடமாடும் மக்கள் குறைதீர்க்கும் வாகனத்தை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று (03.12.2016) கொடியசைத்து துவக்கி வைத்து பார்வையிட்டார்.இதனைத் தொடர்ந்து கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகக் கூட்டரங்கில்  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



அமைச்சர் பேசுகையில், தமிழக முதலமைச்சர் ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெற வேண்டுமென்று பல்வேறு அரசு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள். இந்தியாவிலேயே தமிழகத்தை போல் வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற திட்டங்கள் இல்லை. பொது மக்களின் குறைகளை உடனடியாக தீர்வு காணும் விதமாக தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க இன்று (03.12.2016) கோவை மாநகராட்சியில் நடமாடும் மக்கள் குறைதீர்க்கும் வாகனம் துவக்கி வைக்கப்பட்டது.

மேலும், தமிழகத்தில் மழை குறைவாக உள்ளதால், பொது மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவேண்டும். மேலும் மாநகராட்சி அதிகாரிகள் குடிநீரை பொது மக்களுக்கு சீரான முறையில் விநியோகிக்க வேண்டும். குறிப்பாக மழைகாலம் என்பதால் மாநகராட்சி அதிகாரிகள் மிகவும் கவனத்துடன் செயல்பட்டு, போர்க்கால அடிப்படையில் தயார் நிலையில் இருக்க வேண்டும். கோவை மாநகராட்சியில் குடிநீர் குழாய்கள், தெரு விளக்குகள், சாலை பழுதுகள் ஏற்பட்டால் அதை உடனடியாக சரிசெய்ய வேண்டும். இவ்வாறு மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்களின் தெரிவிக்கையில் “மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் தலைமையில் ஐந்து மண்டலங்களிலுள்ள உதவி ஆணையாளர்களின் மேற்பார்வையில் நடமாடும் மக்கள் குறைதீர்க்கும் வாகனம் செயல்படும். இந்த வாகனமானது ஐந்து மண்டலங்களிலும் திங்கள் முதல் வெள்ளி வரை, அதாவது  திங்கட்கிழமை அன்று மத்திய மண்டலத்திற்கும், செவ்வாய் கிழமை அன்று கிழக்கு மண்டலத்திற்கும், புதன் கிழமை அன்று மேற்கு மண்டலத்திற்கும், வியாழக்கிழமை அன்று தெற்கு மண்டலத்திற்கும், வெள்ளிக் கிழமை அன்று வடக்கு மண்டலத்திற்கும் நாள்தோறும் அந்தந்த வார்டுகளுக்குச் சென்று பொது மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு, மாலை 4.00 மணியளவில் அந்தந்த மண்டல அலுவலகத்திற்கு வந்து சேரும். மேற்கண்ட ஐந்து மண்டலங்களின் அலுவலகத்திற்கு தினமும் மாலை 4.30 மணியளவில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் நேரடியாகச் சென்று பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, கீழ்குறிப்பிட்ட நேரங்களில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்களிடமும் பொது மக்கள் தங்கள் மனுக்களை நேரடியாகவும் வழங்கலாம்.



நடமாடும் மக்கள் குறைதீர்க்கும் வாகனம் செல்லும் இடங்களின் விவரம்
திங்கட்கிழமை 
மத்திய மண்டலம்
காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை
மாநகராட்சி பிரதான அலுவலகம் மாலை 4.30 மணி

செவ்வாய்க்கிழமை 
கிழக்கு மண்டலம்
காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை
கிழக்கு மண்டல அலுவலகம் மாலை 4.30 மணி

புதன் கிழமை
மேற்கு மண்டலம்
காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை
மேற்கு மணடல அலுவலகம் மாலை 4.30 மணி

வியாழக்கிழமை 
தெற்கு மண்டலம்
காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை
தெற்கு மண்டல அலுவலகம் மாலை 4.30 மணி

வெள்ளிக்கிழமை 
வடக்கு மணடலம்
காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை
வடக்கு மண்டல அலுவலகம் மாலை 4.30 மணி

இந்த வாகனமானது ஐந்து மண்டலங்களிலும் தினமும் ஒவ்வொரு வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை தொடர்ந்து செல்லும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன், கோவை பாராளுமன்ற உறுப்பினர் பி.நாகராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன்.கே.அர்ஜுனன், வி.சி.ஆறுக்குட்டி, அ.சண்முகம், துணை ஆணையாளர் காந்திமதி அவர்கள், அனைத்து உதவி ஆணையாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...