கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் காவல் உதவி ஆய்வாளர் போல் போலியாக நடித்து பொதுமக்களிடம் பணம்பறிக்கும் கும்பலை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேட்டுப்பாளையம் அருகே தாசம்பாளையத்தில் காவல் உதவி ஆய்வாளர் போல் நடித்து பணம் பறிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த வினோத் என்ற இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, அவருக்கு உதவியாக செயல்பட்ட மேலும், 5 பேரை கைது செய்த காவல் துறையினர், இவர்களிடம் இருந்து போலி அடையாள அட்டை மற்றும் ஒரு லட்சம் ரொக்க பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.