முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலக்குறைவு எதிரொலி: கோவையில் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கம்

முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று மாலை அவருக்கு திடீரென 'கார்டியாக் அரஸ்ட்' ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்டது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. சென்னை உட்பட முக்கிய நகரங்களில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் கோவையில் நள்ளிரவில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்தது. பல பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டன. நள்ளிரவே மக்கள் பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கிச்சென்றனர். 

இந்த நிலையில் இன்று காலை கோவையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. கோவை காந்திபுரம் மற்றும் உக்கடம் பேருந்து நிலையங்களில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் கேரளா செல்லும் பேருந்துகள் இயல்பாக இயக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...