2016-17ஆம் ஆண்டிற்கான அகில இந்திய அளவிலான என்சிசி பயிற்சி முகாம், கோவை ஸ்ரீ சக்தி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் டிசம்பர் 3ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது.

அட்வான்ஸ் லீடர்சிப் கேம்ப்- 17 என்னும் இந்த முகாமில் பல்வேறு என்சிசி பிரிவு இயக்குநகரத்திலிருந்து 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்ட 2016-17ம் ஆண்டிற்கான இம்முகாமை கோவை குரூப் கமேண்டர் கர்னல் எம்.பி.செலஸ்டின் சேனா மெடல் மற்றும் இம்முகாமின் தலைமை அதிகாரி தொடக்கி வைத்தார்.
இம்முகாமில், கோவை மாவட்ட ஆட்சியர், கோவை மாநகர ஆணையர் மற்றும் மாநகர காவல் துறை ஆணையர் ஆகியோர் என்சிசி மாணவர்களுக்கான தலைமை பண்புகளையும், ராணுவத்தில் முப்படைகளில் சேர்வதற்கான பயிற்சி மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்டவற்றின் நடைமுறை பயிற்சி, நேர்காணலுக்கு தயார்படுத்துவது குறித்து சிறப்புரையாற்ற உள்ளனர்.
மேலும், தனி நபர் மேலாண்மை குறித்த வகுப்பும், அதுகுறித்த பயிற்சி பட்டறையும் வெளிமாநில என்சிசி மாணவர்கள் பார்வையிடுவதற்கும், இம்முகாமின் பயிற்சி அதிகாரி மேஜர் தேசிங் மற்றும் மேஜர் ரூபா ஆகியோர் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.