ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி துவக்கம்

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் அக்கல்லூரி மாணவிகளுக்கான தற்காப்புகள் குறித்து மூன்று நாள் பயிற்சி துவங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியின் முதல்வர் கே.சித்ரா கூறியதாவது:-

இந்நாட்டில் பிறந்த குழந்தை முதல் 90 வயது வரை உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இந்திய மக்கள் தொகையில் பெண்கள் 50 சதவிகிதம் உள்ளனர். ஆனால், அவர்கள் சமூகத்தில் வன்முறைக்கும், ஒடுக்குமுறைக்கும் உட்படுத்தப்பட்டு வருகின்றனர். பெண்கள் மீது தினிக்கப்படும் ஒடுக்குமுறையால் அவர்கள் சமுதாயத்துடன் ஒன்றிணையாமல் வேலைக்குச் செல்ல முடியாமல் யாரையேனும் சார்ந்தே வாழ்ந்து வருகின்றனர்.



பெண்களாக நாம் மிகவும் விழிப்புணர்வோடும், எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும். தற்காத்துக்கொள்வது என்பது உடல் ரீதியிலான பிரச்சனைகளில் மட்டுமின்றி மனரீதியாகவும் பாதுகாத்துக்கொள்வது ஆகும்'' என்றார்.

அறம் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லதா சுந்தரம் கூறியதாவது:-

பெண்களுக்கு அவர்களது தன்மானம் மிகவும் முக்கியம். இவ்வுலகில் ஒரு பெண்ணால் முடியாதது வேறு யாராலும் முடியாது. கடவுளின் படைப்பில் பெண்கள் மிகவும் சக்தி படைத்த திறமையாளர்கள். பெண்கள் பல வகைகளில் துன்புருத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். பெண்கள் நினைத்தால் உலகை மாற்ற முடியும்'' என்றார்.படைப்பில் பெண்கள் மிகவும் சக்தி படைத்த திறமையாளர்கள். பெண்கள் பல வகைகளில் துன்புருத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். பெண்கள் நினைத்தால் உலகை மாற்ற முடியும்'' என்றார்.

இதுகுறித்து நமது நிருபருக்கு லதா சுந்தரம் அளித்த பிரத்தியேக பேட்டியில் கூறுகையில், 

ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் பெண்கள் தங்களை தற்காத்துக்கொள்வது என்பது மிகவும் முக்கியம். அது இக்காலத்தின் கட்டாயம். பெண்கள் என்று தாங்களாகவே பிரச்சனையில் சிக்கிக் கொள்கின்றனர். பின்பு அவதிப்படுகின்றனர். இந்த பயிற்சியானது பெண்களிடையே மாற்றத்தினை ஏற்படுத்தும் என நம்புகிறேன்'' என்றார்.



இந்நிகழ்ச்சியில், அறம் அறக்கட்டளை அறங்காவலர் மற்றும் வழக்கறிஞர் டி.சிவகுமார், கோகுலராஜ், விவேக் ஆகியோர் மாணவிகளுக்கு தற்காப்புகள் குறித்த பயிற்சி அளித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...