முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை குறித்த பதிவுகளைக்காட்டி சமூக வலைத்தளங்களில் முட்டிக்கொள்ளும் இளைஞர்கள்


தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் இந்த நிலையில் ஜெயலலிதா-வின் உடல்நிலை குறித்து பலர் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். பொதுமக்கள் பலர், முதல் அமைச்சர் நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்வதாகவும், விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்றும் பதிவு செய்துள்ளனர். முகநூலில் பேசப்பட்ட தலைப்புகளில் (டிரெண்டிங்) ஜெயலலிதாவின் பெயர் முதல் இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், சமூகவலைத்தளங்களில் சிலர், முதல் அமைச்சர் உடல் நிலை குறித்த அவதூறான தகவல்களை  பதிவேற்றி வருகின்றனர். இந்த பதிவுகளை பார்க்கும் ஜெயலலிதா நலம் விரும்பிகள் கொதிப்படைந்து பதிவிட்ட  அந்த நபரை திட்ட, பதிலுக்கு எதிர்தரப்பில் இருந்தும் தாறுமாறான வார்த்தைகள் வெடிக்க இரு தரப்பினரும் சமூகவலைத்தளங்களில் சண்டையிட்டு கொள்கின்றனர்.

இந்த நிலையில், முதல் அமைச்சர் குறித்து அவதூறு பரப்புவோர் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...