கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லவாடி பகுதியை சேர்ந்தவர் சூரியன் (21). இவர் கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்துவந்தார். இந்த நிலையில் நேற்று, இவர் தனது நண்பர்களான இளங்கோ மற்றும் கவுசிக் என்ற இருவருடன் இருசக்கர வாகனத்தில் கொடிசியா நோக்கி சென்றார். அப்போது அவிநாசி சாலையில் வந்த கார் சூரியன் ஓட்டி வந்த வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் மூவரும் தூக்கியெறியப்பட்டனர். படுகாயம் அடைந்த மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், அவர்கள் வந்த வாகனம் தீப்பிடித்தது. சம்பவம் அறிந்து வந்த பீளமேடு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். பின்னர், மாணவர்களின் உடலை மீட்ட போலீசார் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார். தொடர்ந்து காரை ஓட்டிவந்த தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பரத் (26) என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், அவர்கள் வந்த வாகனம் தீப்பிடித்தது. சம்பவம் அறிந்து வந்த பீளமேடு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். பின்னர், மாணவர்களின் உடலை மீட்ட போலீசார் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார். தொடர்ந்து காரை ஓட்டிவந்த தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பரத் (26) என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.