தமிழக முதல்வரின் மறைவையொட்டி கோவையில் கண்ணீர் அஞ்சலி!


தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவந்த நிலையில் நேற்று இரவு (டிச. 6) சுமார் 11.30 மணியளவில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டது.



கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெருட்சோடியே காணப்படுகின்றது. பள்ளி, கல்லூரிகளுக்கும், பெரும்பாலான அலுவலகங்களிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் போக்குவரத்து குறைவாகவே காணப்படுகிறது. சிறிய மள்ளிகைக் கடை முதல் பெரிய வணிக வளாகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. இருப்பினும் அத்யாவசியத் தேவைகளான மருந்துக் கடை, பெட்ரோல் பங்குகள், ஆம்புலன்ஸ் ஆகியவை செயல்பட்டு வருகிறது.



இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சென்னை விரைந்தனர். மாவட்டங்களின் பல பகுதிகளிலும் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பேருந்துநிலையத்தில் கோவை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு உயிரிழந்த தமிழக முதல்வருக்கு மௌன அஞ்சலி செலுத்தினர்.



இந்நிலையில், காந்திபுர பேருந்து நிலையத்தில் பெண்கள் ஏராளமானோர் கூடி ஜெயலலிதாவின் உயிரிழப்பையொட்டி ஒப்பாரிவைத்து அஞ்சலி செலுத்திவந்த நிலையில் இரண்டு பெண்கள் மயங்கி விழுந்தனர். அவர்களை மீட்ட மற்ற அதிமுக-வினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...