தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5ம் தேதியன்று உடல்நலக்குறைவின் காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு மரியாதை மற்றும் அஞ்சலி செலுத்தும் வகையில் டிச. 6 முதல் 7ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு கோவையில் செயல்பட்டு வரும் அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக (டாஸ்மாக்) மதுபானக் கடைகள் மற்றும் அத்துடன் இணைக்கப்பட்ட FL1, FL2, FL3, FL3A, FL3AA, FL4A, FL10, FL11 (FL6 தவிர) ஆகிய மதுபான உரிம இடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளுக்கு முரணாக மேற்குறிப்பிட்ட தேதிகளில் மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.