ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பில் செயல்பட்டு வரும் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள 30 பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசின் பல நலத்திட்டங்களை பெற அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

முக்கியமாக ரயிலில் பயணம் செய்யும் போதும் அவர்களுக்கு ஆதார் அட்டை ஒரு அடையாள அட்டையாக பயன்படும். இந்த செயலானது, அந்த இல்லத்தில் உள்ளவர்களுக்கு ஒரு நம்பிக்கையினையும், அடையாளத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஈரநெஞ்சம் அறக்கட்டளை நிறுவனர் மகேந்திரன் கூறுகையில், "இவ்வுலகில் ஆதரவற்றோர் என யாரும் இருக்கக் கூடாது. அவர்களுக்கென ஒரு குடும்பத்தை உருவாக்க வேண்டும். மற்றவர்களிடத்தில் இருந்து அவர்கள் வேறுபட்டு இருப்பது தவிர்க்கப்பட வேண்டும். அதன்படி தற்போது ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது அவர்களுக்கு ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தும்'' என்றார்.
