கோவையில் வங்கி ஊழியருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே மோதல்


டவுன்ஹால் பகுதியில் உள்ள பெரியகடை வீதி கிளை  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வாடிக்கையாளருக்கும், வங்கி ஊழியருக்கும்  இடையே தகராறு ஏற்பட்டது. பிரதமர் மோடி 500,1000 ரூபாய் நோட்டு செல்லாது என கடந்த மாதம் அறிவித்த நிலையில், வங்கியில் இன்றுவரை பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர். 

இதன் விளைவாக, டவுன்ஹால் பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கணக்கில் சேமிப்பு வைத்திருப்பவர்களுக்கு  ரூபாய் 2000 மட்டுமே இன்று வரை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு டோக்கன் வழங்கப்பட்டு காலை முதல் மாலை வரை பொதுமக்கள்  வங்கியில் காத்திருந்து வாங்கி செல்கின்றனர். 



இந்நிலையில் வாடிக்கையாளர் ஒருவர் இதனை வங்கி ஊழியரிடம் கேட்கையில், அவர் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனிடையே இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர், வங்கி ஊழியர் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்  என்று அவர் கூறினார். மேலும், வங்கியில் காத்திருக்கும் நிலைமாற இரண்டு கவுண்டர் திறக்கவும், ரூபாய் 2000க்கும்மேல் பணம் வழங்கப்பட வேண்டும் என வாடிக்கையாளர்கள் அனைவரும் கேட்டுக் கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...