மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் - உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி


மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமெனவும், ஜெயலலிதாவிற்கு சொந்தமான சொத்துகளை அரசுடமையாக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி வழக்கு தொடர உள்ளதாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான கிருஷ்ணமூர்த்தி கோவையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது முறையான சிகிச்சை அளிக்கதாதலேயே உயிரிழந்து இருப்பதாகவும், ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமெனவும் தெரிவித்தார்.

ஜெயலலிதாவிற்கு சொந்தமான 'வேதா இல்லம்' உள்ளிட்ட சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டுமெனவும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுக கட்சி மற்றும் சொத்துக்களை அபகரிக்க முயல்வதாகவும் குற்றம்சாட்டிய அவர், அதிமுக பொதுச்செயலளாராக மூத்த தலைவர்களான பி.ஹெச்.பாண்டியன், பண்ரூட்டி ராமசந்திரன் உள்ளிட்டோரில் ஒருவரை நியமிக்க வேண்டுமென தெரிவித்தார். 

ஜெயலலிதா உடல்நிலை குறித்த உண்மைகளை மறைத்த அப்போல்லா மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி மீது சட்ட பூர்வமாக நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும், முறையான சிகிச்சை அளிக்காமல் உயிரிழப்பிற்கு காரணமான சசிகலா உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...