கோவையில் அடிப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட அறிய வகை வெள்ளை ஆந்தை மற்றும் வீட்டில் பிடிபட்ட 6 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பை பாம்பு மீட்டு குழுவை சேர்ந்த சன்சய் என்பவர் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தார்.
கோவை மாவட்டம், புளியகுளம் பெரியார்நகர் பகுதியில் அறிய வகை வெள்ளை ஆந்தை ஒன்று காக்கைகளால் தாக்கப்பட்டு படுகாயத்துடன் சாலையில் விழுந்துகிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பாம்பு மீட்புக் குழுவைச் சேர்ந்த சன்சய் என்பவர் அதை மீட்டார்.
இதைத்தொடர்ந்து, புளியகுளம் அருகே உள்ள சுங்கம் பைபாஸ் சாலை பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரது வீட்டில் பாம்பு நுழைந்துவிட்டதாக பாம்பு மீட்புக் குழுவின் சன்சய்-க்கு தகவல் வந்தது. அப்பகுதிக்குச் சென்ற அவர் அங்கொரு வீட்டில் இருந்த 6 அடி நீளமுள்ள சாரைபாம்பையும் மீட்டு மதுக்கரை வனத்துறையிடம் ஒப்படைத்தார்.
கோவை மாவட்டம், புளியகுளம் பெரியார்நகர் பகுதியில் அறிய வகை வெள்ளை ஆந்தை ஒன்று காக்கைகளால் தாக்கப்பட்டு படுகாயத்துடன் சாலையில் விழுந்துகிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பாம்பு மீட்புக் குழுவைச் சேர்ந்த சன்சய் என்பவர் அதை மீட்டார்.
இதைத்தொடர்ந்து, புளியகுளம் அருகே உள்ள சுங்கம் பைபாஸ் சாலை பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரது வீட்டில் பாம்பு நுழைந்துவிட்டதாக பாம்பு மீட்புக் குழுவின் சன்சய்-க்கு தகவல் வந்தது. அப்பகுதிக்குச் சென்ற அவர் அங்கொரு வீட்டில் இருந்த 6 அடி நீளமுள்ள சாரைபாம்பையும் மீட்டு மதுக்கரை வனத்துறையிடம் ஒப்படைத்தார்.