
கோவையில் பார்வையற்றவர்கள் சார்பில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் ஜெயலலிதாவின் கனவுகள் நிறைவேற உறுதுணையாக இருப்போம் என உறுதிமொழியேற்றனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகிறது, இதன் ஒரு பகுதியாக கோவையில் பார்வையற்ற மாற்றுதிறனாளிகள் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர், வரதராஜபுரம் பகுதியிலுள்ள பார்வையற்றோர் தேசிய இணைய அலுவலகத்தில் நடந்தநிகழ்ச்சியில் 25 க்கும் மேற்ப்பட்ட பார்வையற்றவர்கள் கலந்து கொண்டனர், அப்போது அவர்கள் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மெழுகுவர்த்தி ஏற்றியும் மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தினர், முன்னதாக நடந்த உறுதிமொழியேற்ப்பு நிகழ்வில் கலந்துகொண்ட அவர்கள் ஜெயலலிதாவின் கனவான அமைதி, வளம், வளர்ச்சி ஆகியவற்றை நிலை நாட்ட மாற்றுதிறனாளிகள் சார்பில் உறுதுனையாக இருப்போம் என உறுதி மொழியேற்றனர்.